states

img

உத்தரப்பிரதேசத்தை மிரட்டும் ஓநாய்கள் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில், ஓநாய் கள் ஊருக்குள் புகுந்து (நள்ளிரவு நேரத்தில் மட்டும்) மனிதர்களை கொன்று வேட்டை யாடி வருகிறது. இது வரை 8 சிறுவர்கள் உட்பட 9 பேர் ஓநாய் தாக்குதலுக்கு உயிரி ழந்துள்ள நிலையில், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இந்நிலையில், திங்களன்று அதி காலை பஹ்ரைச் மாவட்டத்தின் தேப்ரா கிராமத்திற்குள் புகுந்த ஓநாய்கள், 2 பெண்களை தாக்கியத்துடன் தாயுடன் தூங்கிக் கொண்டு இருந்த 3 வயது குழந்தையை கடித்து கொன்றுள்ளன. இதனால் பஹ்ரைச் மாவட்டத்தின் பெரும் பாலான கிராம மக்கள் ஆளும் பாஜக அரசிற்கு எதிராக போர்க்கொடி தூக்கி யுள்ள நிலையில், மக்களின் எதிர்ப்பால் ஓநாய்களை பிடிக்க “ஆப்ரேஷன் பேடியா” திட்டத்தை துவங்கியுள்ளது உத்தரப்பிரதேச பாஜக அரசு. இந்த புதிய திட்டத்தின் மூலம் 4 ஓநாய்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.